உன் மடியில்
தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற கனவு
களைந்து போகட்டும்.
உயிர்மெய் எழுத்துக்களால்
எழுதி இருக்கும் என் கவிதைகள்
உனக்கானது மட்டும் இல்லை
அதில் கலந்து இருக்கும்
என் உயிரும் உனக்கானது தான்.