நான் எழுதிய என் தமிழ் கவிதை
தமிழே தமிழே தாயின தமிழே
தமிழே தமிழே தாயக தமிழே
பளிங்கான ஒற்றை தமிழே
பதினாறு பெற்ற தமிழே
குமரியில் குரல்கொடுத்து
குழந்தையான தொன்மைதமிழே
முத்தமிட இலக்கணமாய்
முதிர்ந்துநிற்கும் முன்மைதமிழே
இருசேர முப்பதில்
இசைக்கபொழியும் எண்மைதமிழே
மலைமேல் கதிராய்
மறையில்ஒளிக்கும் ஒண்மைதமிழே
அரிவை பெண்ணாய்
அழகைகொஞ்சும் இளமைதமிழே
ஒன்றுக்கே பலபெயராய்
ஒலியில்தவழும் வளமைதமிழே
பிறமொழிக்கும் சொல்கொடுத்து
பிரிந்துசெல்லா தாய்மைதமிழே
காலபோக்கில் கடன்வாங்கா
காலதர்காற்றே தூய்மைதமிழே
பேச்சில்ஒன்று எழுத்தில்ஒன்று
பேதையும்சிலிர்க்கும் செம்மைதமிழே
இயல்இசை கூத்தென்று
இமைத்துவிளங்கும் மும்மைதமிழே
உவமைபெற்று உரைஇனிக்கும்
உட்சபடைப்பே இனிமைதமிழே
துல்லியஅளவில் துயவர்தீண்டா
துணிந்துவாழும் தனிமை தமிழே
ஓரெழுத்திலும் அர்த்தம்தந்து
ஓங்கிநிற்கும் பெருமைதமிழே
உன்கோர்பில் சூத்திரம்தந்த
உலககட திருமைதமிழே
செயற்கைஅற்று செழித்துகொஞ்சும்
செம்மலராம் இயன்மைதமிழே
பாரெங்கும் தேடிசெல்லும்
பாதைகொண்ட வியன்மைதமிழே
உனை பார்ந்து கவர்ந்தவர் எத்தனை
உனை கோர்த்து உயர்ந்தவர் எத்தனை
சிந்தனையில் சில நொடி நிறைந்தால்
சிந்திய தேனாய் உன்சுவை இனிக்குமே
பத்திகளில் உனை எழுத என்
பத்து விரல் துடிக்குமே
யுக்தியாய் உனை அறிந்தால்
யுவதி வெறி எவன் கொல்வான்
இன்பம் என உனை நினைத்தால்
இறுதி வரை அவன் வெல்வான்
நன்றி தமிழே!!!!!!!!