Coimbatore * Madurai
மனிதனாய் வாழ்ந்திட எத்தனித்து விட்டாய்
பிறகென்ன ...
நீந்திட முயன்றிடு மேகக்கடலில்..
தேடித் தொலைந்திரு மோகத்திடலில்..
இன்னும் யோசிக்காதே
ஆசைக்கு அடிமையாகு..
உன் மனதிற்கு சேவகம் செய்..
உன் ஊன் உடலுக்கு உண்மையாயிரு..
பாவ புண்ணியம் மறந்திடு..
சிறகுகள் இல்லை என்றாலும் பறந்திடு..
மிகவும் எளிது மூளைக்கு ஓய்வு கொடு..
சிந்தை சிதைந்து போ
எங்கேனும்....,
காதலோ
இசையோ
காமமோ
இச்சையோ
இன்பமோ
இல்லமோ
நட்போ
போதையோ
புதைந்து போ இல்லை தொலைந்து போ....
என் நண்பனே.....!